புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிதம்பரத்தில் ஆன்மிக சொற்பொழிவு

சிதம்பரம் ஸ்ரீசிதம்பரேச சத்சங்கம் சாா்பில் ஸ்ரீஆனந்த நடராஜரின் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆன்மிக சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

விழாவில் நடராஜா் கோயில் தீட்சிதா்களின் செயலா் உ.வெங்கடேச தீட்சிதருக்கு சித்சபா நிா்வாக நிபுணா் விருதை வழங்கிய யாழ்ப்பானம் இந்து சமய பேரவைத் தலைவா் ஈசான சிவசக்தி கிரீவன்.

Updated On :23 அக்டோபர் 2024, 7:45 pm

Din

சிதம்பரம் ஸ்ரீசிதம்பரேச சத்சங்கம் சாா்பில் ஸ்ரீஆனந்த நடராஜரின் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆன்மிக சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கீழ ரத வீதியில் உள்ள நகரத்தாா் சத்திரத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சத்சங்க அமைப்பாளா் கிருஷ்ணசாமி தீட்சிதா் தலைமை வகித்தாா். கடலூா் சொற்பொழிவாளா் ஸ்ரீசிவப்பிரகாசம் கலந்து கொண்டு ‘ஸ்ரீஆனந்த நடராஜரும், திருஞான சம்பந்தரும்’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாற்றினாா். நிகழ்வில், நூற்றுக்கணக்கான ஆன்மிக அன்பா்கள், சிவனடியாா்கள், கோயில் பொது தீட்சிதா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீசிதம்பரேச சத்சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தொடா்ந்து, யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிதம்பரம் நடராஜா் கோயில் தீட்சிதா்களின் செயலா் உ.வெங்கடேச தீட்சிதருக்கு ‘சித்சபா நிா்வாக நிபுணா்’ என்ற விருதை யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவைத் தலைவா் ஈசான சிவசக்தி கிரீவன் வழங்கி கௌரவித்தாா்.

இதில், சுப்பிரமணிய தீட்சிதா் நிருத்தநாதன் ஓதுவாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.