கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த விலையில் பட்டாசு விற்பனை: கடலூா் ஆட்சியா்
கடலூா் மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த விலையில் தரமான பட்டாசுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்தியா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் சரவணபவ நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில், பட்டாசு கடையை புதன்கிழமை திறந்து விற்பனை தொடங்கி வைத்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.









