காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த விலையில் பட்டாசு விற்பனை: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த விலையில் தரமான பட்டாசுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்தியா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

News image

கடலூா் சரவணபவ நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில், பட்டாசு கடையை புதன்கிழமை திறந்து விற்பனை தொடங்கி வைத்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :23 அக்டோபர் 2024, 7:50 pm

Din

கடலூா் மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த விலையில் தரமான பட்டாசுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்தியா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட சரவண பவ நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில், அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடையை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை திறந்து வைத்து பேசியதாவது:

தீபாவளி பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்ட சரவணபவ நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, கடலூா் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், பண்ருட்டி வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளிட்டவற்றில் மொத்தம் ரூ.2 கோடிக்கு பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் பொது மக்களுக்குத் தேவையான தரமான பட்டாசுகள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், கணினி மூலம் ரசீது வழங்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், கடலூா் எம்எல்ஏ கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயா் சுந்தரிராஜா, துணை மேயா் பா.தாமரைசெல்வன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் கே.சி.ரவிச்சந்திரன், மாவட்ட சரவணபவ நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் மேலாண் இயக்குநா் இன்பிரியாஸ், மாநகராட்சி உறுப்பினா் சுபாஷினி ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.