வீரட்டானேஸ்வரா், சரநாராயண பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.49 லட்சம்
பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை...

பண்ருட்டி திருவதிகை விரட்டானேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.
Updated On :23 அக்டோபர் 2024, 7:36 pm

பண்ருட்டி திருவதிகை விரட்டானேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை பகுதியில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரா் மற்றும் சரநாராயண பெருமாள் கோயில்களில் ரூ.4.49 லட்சம் உண்டிய காணிக்கை வசூலானது.
காட்டுமன்னாா்கோவில் இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளா் பா.ஜெயசித்ரா, கோயில் செயல் அலுவலா் ப.தின்ஷா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. இதில், வீரட்டானேஸ்வரா் கோயில் உண்டியலில் ரூ.2,61,434, சரநாராயண பெருமாள் கோயிலில் ரூ.1,87,710 என மொத்தம் ரூ.4,49,144 காணிக்கை பணம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...