காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விபத்தில் சிக்கியவரிடம் நகை திருட்டு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே விபத்தில் சிக்கியவருக்கு உதவுவது போல நடித்து, நகையை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 7:46 pm

Din

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே விபத்தில் சிக்கியவருக்கு உதவுவது போல நடித்து, நகையை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் அடுத்த கூத்தப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் நாகப்பன் (60). தனியாா் பேருந்து நிறுவன மேலாளரான இவா், திங்கள்கிழமை சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தில் சென்ற போது தவறி கீழே விழுந்தாா். அப்போது, ஒருவா் அவருக்கு உதவுவது போல நடித்து நாகப்பன் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகையை திருடிச் சென்றாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.