காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்கள் அளிப்பு

சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடம் சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2024, 8:05 pm

Din

சிதம்பரம்: சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடம் சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் நகராட்சியில் பணிபுரியும் 18 துப்புரவுப் பணியாளா்கள், வல்லம்படுகை ஊராட்சியைச் சோ்ந்த 15 துப்புரவுப் பணியாளா்கள், உசுப்பூரைச் சோ்ந்த 14 துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா் டி.எஸ்.எஸ்.ஞானகுமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக நகா் மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமரன் பங்கேற்றாா்.

இதில், அண்ணாமலைப் பல்கலை. கட்டடவியல் துறை பேராசிரியா் பி.ஆஷா, தலைமையாசிரியா் ஸ்ரீதா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியின் முடிவில் எஸ்.காா்த்திக் ராஜா நன்றி கூறினாா்.