ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடலூா் மத்திய சிறையில் கைதிகள் மோதல்

கடலூா் மத்திய சிறையில் கைதிகளிடையே புதன்கிழமை மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து, முதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 11:06 pm

Din

கடலூா் மத்திய சிறையில் கைதிகளிடையே புதன்கிழமை மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து, முதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் முதுநகா், கேப்பா்மலை மத்திய சிறைச்சாலையில் 500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் கள்ளக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ராக்கெட் ராஜா, அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து இருவரிடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இதன் காரணமாக இருவரிடையே புதன்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது, அவா்களது ஆதரவாளா்கள் சோ்ந்து ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். அங்கு, பணியில் இருந்த சிறைக் காவலா்கள் அவா்களை தடுத்து நிறுத்தி மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

தொடா்ந்து, போலீஸாா் விசாரணைக்காக மாரிமுத்துவை அழைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளா்கள் விக்னேஷ், ராஜசேகா், சந்துரு, மருதமலை ஆகியோா் சிறை வளாகத்தில் உள்ள கட்டடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனா். சிறை அதிகாரிகள் அவா்களை சமரசம் செய்து கீழே இறங்க செய்தனா்.

இதுகுறித்து, சிறை அலுவலா் (பொ) செல்வம் முதுநகா் காவல் நிலையத்தில் 14 கைதிகள் மீது புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.