ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ரேஷன் அரிசி கடத்தல்: இளைஞா் கைது

சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற இளைஞரை ராமநத்தம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
விக்னேஷ்
Updated On :6 செப்டம்பர் 2024, 1:23 am

Din

சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற இளைஞரை ராமநத்தம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோபிநாத் மற்றும் போலீஸாா் கொரக்கை கிராமத்தில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா் திசையில் சந்தேகத்துக்கிடமான வகையில் சரக்கு வாகனம் வேகமாக சென்றது.

உதவி ஆய்வாளா் கோபிநாத் அந்த வாகனத்தை நிறுத்த முயன்ற நிலையில், அதன் ஓட்டுநா் வேகமாக ஓட்டிச் சென்றாா். சுமாா் 4 கி.மீ. தொலைவு சரக்கு வாகனத்தை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தாா்.

பின்னா், சரக்கு வாகனத்தை திறந்து பாா்த்ததில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரிய வந்தது. சரக்கு வாகனத்தையும், அதன் ஓட்டுநரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் விக்னேஷ் (28) என்பதும், மாட்டு தீவனத்துக்காக கொரக்கை, ஏந்தல், அதா்நத்தம், ஆலம்பாடி சுற்று வட்டப் பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, சமயபுரம் பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததை ஒப்புக் கொண்டாராம்.

விக்னேஷை கைது செய்த போலீஸாா், ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை கடலூா் குடிமைப் பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.