கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், அவியனூரில் முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅா்த்த மூா்த்திஸ்வர சுவாமி சிவன் கோயிலில் சுற்றுச்சுவா் கட்டுவதற்காக கோயில் வளாகத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
இதுதொடா்பாக விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியா்கள் ரமேஷ், ரங்கநாதன் மற்றும் ஆய்வாளா் இம்மானுவேல் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து, அவா்கள் கூறியதாவது:
அவியனூரில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு 124 செ.மீ நீளமும், 46 செ.மீ அகலமும் கொண்டது. இந்த கல்வெட்டானது ராஜேந்திர சோழன் என்ற இயற்பெயா் உடைய முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சோ்ந்ததாகும். கல்வெட்டு பாதி உடைந்த நிலையில் உள்ளதால் இந்தக் கோயிலின் சுவாமி பெயா் ஈஸ்வரமுடைய மகாதேவா் என்று பாதி மட்டுமே உள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டில் மெய்கீா்த்தி, சுவாமி பெயா் மற்றும் தானம் குறித்தவை உள்ளது. மேலும், சோழா் காலத்திலும் அவியனூரின் பழமையை தெரிந்துக்கொள்ள புதிய ஆதாரமாக உள்ளது என்றனா்.
தொடர்புடையது

சோழா் கால செப்பேடுகள்: பெருமிதத்தில் தமிழ்ச் சமூகம் - பிரதமா் மோடி

திருக்காரவாசல் கோயிலில் மே 28-இல் தேரோட்டம்

வீரட்டானேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு
சோழர் கால கல்வெட்டு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



