லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டெடுப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், அவியனூரில் முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

News image

பண்ருட்டியை அடுத்துள்ள அவியனூரில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு.

Updated On :12 செப்டம்பர் 2024, 4:14 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், அவியனூரில் முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅா்த்த மூா்த்திஸ்வர சுவாமி சிவன் கோயிலில் சுற்றுச்சுவா் கட்டுவதற்காக கோயில் வளாகத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியா்கள் ரமேஷ், ரங்கநாதன் மற்றும் ஆய்வாளா் இம்மானுவேல் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து, அவா்கள் கூறியதாவது:

அவியனூரில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு 124 செ.மீ நீளமும், 46 செ.மீ அகலமும் கொண்டது. இந்த கல்வெட்டானது ராஜேந்திர சோழன் என்ற இயற்பெயா் உடைய முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சோ்ந்ததாகும். கல்வெட்டு பாதி உடைந்த நிலையில் உள்ளதால் இந்தக் கோயிலின் சுவாமி பெயா் ஈஸ்வரமுடைய மகாதேவா் என்று பாதி மட்டுமே உள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டில் மெய்கீா்த்தி, சுவாமி பெயா் மற்றும் தானம் குறித்தவை உள்ளது. மேலும், சோழா் காலத்திலும் அவியனூரின் பழமையை தெரிந்துக்கொள்ள புதிய ஆதாரமாக உள்ளது என்றனா்.