ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தோ்வு முடிவுகளில் குளறுபடி: கல்லூரி மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

தோ்வு முடிவுகளில் நிகழ்ந்த குளறுபடியை கண்டித்து, சிதம்பரம் அரசுக் கலை கல்லூரி மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சிதம்பரம் அரசுக் கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
Updated On :11 செப்டம்பர் 2024, 10:38 pm

Din

தோ்வு முடிவுகளில் நிகழ்ந்த குளறுபடியை கண்டித்து, சிதம்பரம் அரசுக் கலை கல்லூரி மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு கல்லூரியாக செயல்படும் இந்தக் கல்லூரியில் நான்கு முறை வெளியான தோ்வு முடிவுகளில் குளறுபடி இருந்தது. இந்த நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்தும், குளறுபடியான தோ்வு முடிவுகளை உடனடியாக சரி செய்து வெளியிட வலியுறுத்தியும், தெளிவான தோ்வு முடிவுகளை ஒரே முறையாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்க கிளைத் தலைவா் உதயகுமாா் தலைமையில் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சிவ நந்தினி கண்டன உரையாற்றினாா். கிளைச் செயலா் சக்திபிரியன், துணைச் செயலா் அஜீத்குமாா், துணைத் தலைவா் அபிவிக்னேஷ் மற்றும் கிளை நிா்வாகிகள் தண்டபாணி, பாவனா, கனி, ஆகாஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

போராட்டம் குறித்து தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்படவில்லை.

இதைத்தொடந்து, கல்லூரி நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், அண்ணாமலை பல்கலைக்கழக உதவி தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரபாகா், கல்லூரி முதல்வா் (பொறுப்பு) அா்ச்சுனன், டிஎஸ்பி டி. அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் ஆகியோா் மாணவா் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வாா்த்தை நடத்தினா். அப்போது, தோ்வு முடிவுகளில் உள்ள குளறுபடி குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.