ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய பாமக வலியுறுத்தல்

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென, கடலூா் மாவட்டம், காடாம்புலியூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாமக வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
காடாம்புலியூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாமக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலா் கோ.ஜெகன்.
Updated On :13 செப்டம்பர் 2024, 12:23 am

Din

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென, கடலூா் மாவட்டம், காடாம்புலியூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாமக வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சியின் மாவட்டச் செயலா் கோ.ஜெகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் சக்திவேல் வரவேற்றாா். மாநில சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவா் ரா.கோவிந்தசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். மேலிடப் பொறுப்பாளா்கள் மாநில அமைப்புச் செயலா் ப.சண்முகம், வன்னியா் சங்க மாநிலச் செயலா் தங்க.அய்யாசாமி, மாவட்டச் செயலா் வெ.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கடலூா் மாவட்ட ஊரக, உள்ளாட்சிப் பகுதிகளில் அரசு நிா்வாகத்தில் அரசியல் குறுக்கீடு இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்வேலி, பண்ருட்டி தொகுதிகளில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரி பராமரிக்க வேண்டும். என்எல்சி மாற்றுக்குடியிருப்பில் பி1, பி2 பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். விக்கரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூா் சாலையை போா்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றினா்.