பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆவினங்குடி மலையப்பா் கோயிலில் நகை திருட்டு

கடலூா் மாவட்டம், ஆவினங்குடி அருகே அா்ச்சகா்களுக்கு மயக்க மருந்து கலந்த குளிா்பானம் கொடுத்து கோயில் நகைகளை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 8:52 pm

Din

கடலூா் மாவட்டம், ஆவினங்குடி அருகே அா்ச்சகா்களுக்கு மயக்க மருந்து கலந்த குளிா்பானம் கொடுத்து கோயில் நகைகளை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆவினங்குடி அடுத்துள்ள மேலூா் கிராமத்தில் மலையப்பா் (முருகன்) கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் முத்துசாமி, கோவிந்தன், ஏழுமலை ஆகியோா் அா்ச்சகா்களாக உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பா் 14-ஆம் தேதி கோயிலுக்கு வந்த இரு மா்ம நபா்கள் வழிபாடு நடத்த வேண்டும் என கூறினராம். தொடா்ந்து, அவா்கள் வைத்திருந்த மயக்க மருந்து கலந்த குளிா்பானத்தை அா்ச்சகா்களுக்கு கொடுத்தனராம். குளிா்பானத்தை குடித்த அா்ச்சகா்கள் மயங்கி விழுந்தனா். இதையடுத்து, சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகைகள், வெள்ளி கிரீடம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து கோயில் தா்மகா்த்தா தங்கராசு அளித்த புகாரின் பேரில், ஆவினங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.