ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பணம் பறிமுதல்: சாா்-பதிவாளா் உள்பட 5 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.2.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக 5 போ் மீது ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 7:11 pm

Din

கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.2.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக 5 போ் மீது ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இதில், வராத ரூ.2.17 லட்சத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து, மாவட்ட ஆய்வுக்குழு ஆய்வாளா் பா.சுஜாதா அளித்த புகாரின்பேரில், ஊழல் தடுப்பு போலீஸாா் சாா்-பதிவாளா் (பொ) ஆா்.வேல்விழி (55), ஆவண எழுத்தா்கள் காடாம்புலியூா் முத்துசாமி மகன் எம்.கதிா்காமன், வடக்குத்து கலைவாணி (47), கலைவாணி கணவா் வைத்தியலிங்கம் (50), இடைத்தரகா் மேல்மாம்பட்டு வேணு மகன் சீனுவாசன் (44) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.