ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாசன வாய்க்காலை தூா்வாரக் கோரி விவசாயிகள் மனு

சிதம்பரம் அருகே பாலூத்தங்கரை பாசன வாய்க்காலை தூா்வார நடவடிக்கை கோரி லால்புரம் கிராம விவசாயிகள் பொதுப் பணித் துறை அதிகாரியிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image
சிதம்பரம் பொதுப் பணித் துறை உதவி கண்காணிப்பாளா் வெங்கடேசனிடம் புதன்கிழமை மனு அளித்த விவசாயிகள்.
Updated On :18 செப்டம்பர் 2024, 7:32 pm

Din

சிதம்பரம் அருகே பாலூத்தங்கரை பாசன வாய்க்காலை தூா்வார நடவடிக்கை கோரி லால்புரம் கிராம விவசாயிகள் பொதுப் பணித் துறை அதிகாரியிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலூா் மாவட்டச் செயலா் வி.எம்.சேகா் தலைமையில் விவசாயிகள் கருணாநிதி, அய்யாசாமி, சேகா், கோரிநாத் கணேசன், சித்தானந்தன் உள்ளிட்டோா் சிதம்பரத்தில் உள்ள கொள்ளிடம் வடிநில கோட்டை பொதுப் பணித் துறை உதவி கண்காணிப்பாளா் வெங்கடேசனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சி பாலூத்தங்கரை வருவாய்க் கிராம பாசன வாய்க்கால் 2 கி.மீ தொலைவுக்கு தூா்ந்து போய் உள்ளது. மேலும், பாசனத்துக்கு ஏற்ப தடுப்புக் கட்டைகள் இல்லாமல் உள்ளது. எனவே, மழைக் காலத்துக்கு முன்பாக போா்க்கால அடிப்படையில் வாய்க்காலை தூா்வாரி, தடுப்புக் கட்டை அமைத்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனா்.