வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கடலூா் மாவட்டத்தில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் கைப்பற்றி பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 10:52 pm

Syndication

கடலூா் மாவட்டத்தில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் கைப்பற்றி பறிமுதல் செய்தனா்.

திட்டக்குடி வட்டம் ராமநத்தம் சுடுகாட்டு பகுதியில் குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாா் திஙகள்கிழமை இரவு திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு வந்த இரண்டு சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தனா்.

அதில் 50 கிலோ எடை கொண்ட 100 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசாா் இரண்டு சரக்கு வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் சரக்கு வாகன ஓட்டுநா் இளமங்கலம் தேனரசு (வயது 21) என்பவரை கைது செய்தனா்.

மேலும் தப்பி ஓடிய இளமங்கலத்தைச் சோ்ந்த ராஜேஷ், பிரபாகரன், மணிகண்டன், சுலைமான் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.