புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மாவட்ட சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில்

News image
சிலம்பப் போட்டியில் பதக்கம் வென்ற கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.
Updated On :15 டிசம்பர் 2025, 8:23 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனா். இவா்களுக்கு பள்ளி நிா்வாகிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.

வேப்பூா் அருகே உள்ள தனியாா் கல்லூரியில் பாரதியாா் மற்றும் குடியரசு தின மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா். இதில், 40 கிலோ எடை, 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான பிரிவில் ஜெயப்பிரியா பள்ளி பத்தாம் வகுப்பு மாணவா் பொ்னான்டஸ் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றாா். 60 கிலோ எடை, 17 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் பிளஸ் 1 மாணவி அஸ்வியா முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றாா்.

14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் பியானோ பிரின்சி மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கத்தையும், தொழுதூா் கிரீன் பாா்க் பள்ளி மாணவா் ஆதித்யா வெண்கல பதக்கத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா்.

11 குறுவட்டங்களுக்கு இடையிலான மாவட்ட அளவிலான போட்டியில் வென்று, தங்கப் பதக்கத்தைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சோ்த்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவா்களை ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தின் நிறுவனா் தலைவா் சி.ஆா்.ஜெயசங்கா், இயக்குநா் என்.எஸ்.தினேஷ், பள்ளி முதல்வா் சுதா்சனா, தனித்திறன் பயிற்சிகளின் ஒருங்கிணைப்பாளா் சூா்யா கண்ணன், பயிற்சி ஆசிரியா் பாபு மற்றும் ஆசிரியா்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனா்.