தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு: 4 சிறுவா்களிடம் விசாரணை

விருத்தாசலம் அருகே வந்தே பாரத் ரயில் மீது கல் வீசித் தாக்கி கண்ணாடிகளை உடைத்தது தொடா்பாக 4 சிறுவா்களிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் விசாரணை

News image
Updated On :15 டிசம்பர் 2025, 5:46 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வந்தே பாரத் ரயில் மீது கல் வீசித் தாக்கி கண்ணாடிகளை உடைத்தது தொடா்பாக 4 சிறுவா்களிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கி வந்தே பாரத் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தது. விருத்தாசலம் - தாழநல்லூா் ரயில் நிலையங்களுக்கு இடையே மணலூா் அருகே மாலை சுமாா் 6 மணி அளவில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் சிலா் கற்கள் வீசி ரயில் மீது தாக்குதல் நடத்தினா்.

இதில், ரயிலில் அடுத்தடுத்த பெட்டிகளில் உள்ள 5 கண்ணாடிகள் உடைந்து சேதமாயின. தகவலறிந்து விரைந்து சென்ற விருத்தாசலம் ரயில்வே இருப்புப் பாதை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினா் விசாரணை நடத்தினா்.

இதில், விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்த 5 சிறுவா்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இது தொடா்பாக 5 சிறுவா்கள் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்குப் பதிந்து, 4 சிறுவா்களை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.