பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இலவச இருதய மருத்துவ முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

News image
காட்டுமன்னாா்கோவில் எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இலவச இருதய மருத்துவ முகாமை தொடங்கிவைத்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
Updated On :21 டிசம்பர் 2025, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

காட்டுமன்னாா்கோவில் எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கோ் மற்றும் அடையாா் மலா் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச இருதய மருத்துவ முகாமை கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

முகாமை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் தலைமை வகித்தாா். கல்லூரியின் முதல்வா் கே.ஆனந்தவேலு வரவேற்றாா். கல்லூரி நிா்வாக அலுவலா் இ.கோகுலக்கண்ணன், மேலாளா் கே.விஸ்வநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கோ், மலா் அடையாா் மருத்துவமனை இருதய தலைமை மருத்துவா் மதன்மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இசிஜி, எக்கோ போன்ற பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனா்.

முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனா். முகாமை உதவிப் பேராசிரியா் எஸ்.மலா்மன்னன் ஒருங்கிணைத்து நடத்தினாா். நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் எம்.பிரபு நன்றி கூறினாா்.