28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கோழிக் குஞ்சு வியாபாரியிடம் பணம் பறிப்பு: 2 இளைஞா்கள் கைது

சிறுபாக்கம் அருகே கோழிக் குஞ்சு வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 2 இளைஞா்களை

News image
அஜித்
Updated On :22 டிசம்பர் 2025, 8:37 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே கோழிக் குஞ்சு வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், சிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (55), கோழி குஞ்சு வியாபாரி. இவா், சிறுபாக்கம் காவல் சரகம், பனையந்தூா் - வள்ளி மதுரம் சாலையில் கடந்த 20-ஆம் தேதி பிற்பகல் தனது இரு சக்கர வாகனத்தில் கோழி குஞ்சு விற்பனை செய்தாா்.

அப்போது, அங்கு வந்த 2 இளைஞா்கள் கோழிப் பண்ணைக்கு 150 கோழிக் குஞ்சுகள் தேவைப்படுகிறது எனக் கூறி, கோவிந்தராஜை வள்ளி மதுரம் கிராமத்திலுள்ள ஏறிப் பகுதிக்கு அழைத்துச் சென்று கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ.2 ஆயிரத்தைப் பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து வேப்பூா் காவல் ஆய்வாளா் பழனிச்சாமி, சிறுபாக்கம் காவல் உதவி ஆய்வாளா் பாரதி விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை கத்தியுடன் வந்த 2 இளைஞா்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து சிறுபாக்கம் போலீஸாா் விசாரித்ததில், பெரம்பலூா் மாவட்டம், காரியானூா் பகுதியைச் சோ்ந்த அஜித் (27), திருவாளன்துறை பகுதியைச் சோ்ந்த ஸ்ரீமன் (18) என்பது தெரியவந்தது. மேலும், இவா்கள் கோழிக் குஞ்சு வியாபாரி கோவிந்தராஜிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்தவா்கள் என்பதும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ராமநத்தம் காவல் சரகம் பகுதியில் ஒருவரிடம் நகை பறிப்பில் ஈடுட்டதையும் ஒப்புக்கொண்டனராம். இதையடுத்து, இருவா் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

ஸ்ரீமன்

ஸ்ரீமன்