ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரசுக் கல்லூரி முன்பு மாணவா்கள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூா் பெரியாா் கலைக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

News image
கடலூா் அரசு பெரியாா் கல்லூரி முன்பு போராட்டம் நடத்திய மாணவா்கள்
Updated On :30 டிசம்பர் 2025, 8:47 pm

Syndication

கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூா் பெரியாா் கலைக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

கடலூா், தேவனாம்பட்டினம் பகுதியில் அரசு பெரியாா் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.

இக்கல்லூரி மாணவா்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட இணைப்பு கல்லூரிகளுக்கான தோ்வு கட்டண உயா்வை கண்டித்தும், சுயநிதி கல்லூரி போல் செயல்படுவதை கண்டித்தும், யுஜிசி விதிகளை திரும்ப பெற வலியுறுத்தியும், உயா்த்தப்பட்ட அனைத்து கட்டணங்களையும் திரும்ப பெற வலியுறுத்தியும் கல்லூரி நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.