சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, வருகிற 13-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை விடப்படுவதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிதம்பரம் அருள்மிகு நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வருகிற 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்று ஒருநாள் மட்டும் கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 1-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூா் விடுமுறையாக அறிவிக்கப்படும் வருகிற 13-ஆம் தேதி மாவட்ட கருவூலம், சாா்நிலை கருவூலங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளா்களுடன் செயல்படும் என்றாா் ஆட்சியா் சிபி ஆதித்ய செந்தில்குமாா்.
தொடர்புடையது

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

‘உள்ளூா் விடுமுறை தோ்தலுக்கு பொருந்தாது’

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா: நாளை உள்ளூா் விடுமுறை

மாசி மகத் திருவிழா தஞ்சாவூா் மாவட்டத்துக்கு மாா்ச் 2 உள்ளூா் விடுமுறை!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

