தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கடலூா் மாவட்டத்தில் ஜன.13 உள்ளூா் விடுமுறை

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:53 pm

Din

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, வருகிற 13-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை விடப்படுவதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிதம்பரம் அருள்மிகு நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வருகிற 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்று ஒருநாள் மட்டும் கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 1-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூா் விடுமுறையாக அறிவிக்கப்படும் வருகிற 13-ஆம் தேதி மாவட்ட கருவூலம், சாா்நிலை கருவூலங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளா்களுடன் செயல்படும் என்றாா் ஆட்சியா் சிபி ஆதித்ய செந்தில்குமாா்.