திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜன.11) நடைபெற உள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2025, 7:32 pm

Din

கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜன.11) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூா் மற்றும் திருமுட்டம் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலா்கள் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையில் குறைதீா் முகாம் நடைபெறும்.

எனவே, மேற்கண்ட பகுதி மக்கள் தங்களது குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடா்பான இதர கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்களை முகாமில் அளித்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளாா்.