திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 7:36 pm

Din

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் அண்ணாமலை நகா் ரயில்வே மேம்பாலம் அருகே காவல் உதவி ஆய்வாளா் அன்பழகன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் இரு சக்கர வாகனத்துடன் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, தருமபுரி மாவட்டம், பென்னாகரம், ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த விஜய் (24), காட்டுமன்னாா்கோவிலை அடுத்துள்ள லால்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஹாஜா மொய்தீன் (63) என்பதும், பைக்கில் மூட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இவா்களில் விஜய் கடந்த மாதம் சிதம்பரம் அருகே மினி லாரியில் பெங்களூருவில் இருந்து ஒன்றரை டன் புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தவராவாா்.