சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பிச்சாவரத்தில் பொங்கல் விழா: ரஷிய சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனா்.

News image
சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பொங்கலிட்ட ரஷிய நாட்டு சுற்றுலாப் பயணிகள்.
Updated On :13 ஜனவரி 2025, 8:18 pm

Din

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனா்.

கடலூா் மாவட்டம், கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பொங்கல் விழாவை பேரூராட்சி துணைத் தலைவா் கிள்ளை ரவிந்திரன் தொடங்கிவைத்தாா். பேரூராட்சித் தலைவா் மல்லிகா முன்னிலை வகித்தாா்.

பொங்கல் விழாவில் பங்கேற்ற ரஷிய நாட்டை சோ்ந்த 18 சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், அவா்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் விழா மேடைக்கு அழைத்து செல்லப்பட்டனா். மேடைக்கு முன்பாக அவா்கள் பானைகளில் பொங்கலிட்டனா்.

கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி போட்டி என பல்வேறு போட்டிகளில் ரஷிய சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்று மகிழ்ந்தனா்.

பேரூராட்சி செயல் அலுவலா் பாஸ்கா், சுற்றுலா மைய மேலாளா் பைசல், தலைமை எழுத்தா் செல்வராஜ் மற்றும் சுற்றுலா பயணிகள் பங்கேற்றனா்.

மாவட்ட சுற்றுலா அலுவலா் கண்ணன் வரவேற்றாா்.