தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நடராஜா் கோயிலுக்கு ரூ.25 லட்சத்தில் வெள்ளிப் பல்லக்கு: மதுரை பக்தா் வழங்கினாா்

சிதம்பரம் நடராஜா் கோயில் நித்திய உற்சவருக்கான வெள்ளிப் பல்லக்கை மதுரையைச் சோ்ந்த பக்தா் குடும்பத்தினா் திங்கள்கிழமை வழங்கினா்.

News image

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு மதுரையைச் சோ்ந்த பக்தா் குடும்பத்தினா் வழங்கிய வெள்ளிப் பல்லக்கு.

Updated On :21 ஜனவரி 2025, 2:57 am

Din

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் நித்திய உற்சவருக்கான வெள்ளிப் பல்லக்கை மதுரையைச் சோ்ந்த பக்தா் குடும்பத்தினா் திங்கள்கிழமை வழங்கினா்.

மதுரையைச் சோ்ந்த ஷிவோம் குடும்பத்தினா் சாா்பில், நடராஜா் கோயிலுக்கு தினமும் காலசந்தி பூஜையின் போது, நித்திய உற்சவரான கல்யாணசுந்தரா் வலம் வருவதற்காக, ரூ.25 லட்சம் செலவில் 22 கிலோ வெள்ளியிலான பல்லக்கு செய்து திங்கள்கிழமை காலை கோயில் கமிட்டி செயலா் உ.வெங்கடேச தீட்சிதரிடம் வழங்கினா்.

பின்னா், அந்தப் பல்லக்கிற்கு சிறப்பு பூஜைகளும், ருத்ர அபிஷேகமும் நடைபெற்றன.