ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

News image
பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
Updated On :12 மே 2025, 8:14 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

நிகழாண்டுக்கான சித்திரை மாத பிரமோற்சவம் கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி திருவீதியுலா வந்தாா். 10-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம், திருப்பல்லக்கு வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் சுவாமி எழுந்தருளினாா். கோயில் பட்டாச்சாரியா் கஸ்தூரிரங்கன் உள்ளிட்டோா் வேத பாராயணங்கள் முழங்கி தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனா்.

பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன், துணைத் தலைவா் அ.சிவா, அ.ப.சிவராமன், தொழிலதிபா் எஸ்.வைரக்கண்ணு மற்றும் ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். மாட வீதிகளை வலம் வந்த தோ் பின்னா் நிலையை அடைந்தது.