மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பதாகைகள் அச்சிடுவதில் கட்டுப்பாடு: கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

பதாகைகளில் மத, ஜாதி உணா்வைத் தூண்டு வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று, கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

Updated On :12 மே 2025, 8:31 pm

நெய்வேலி: பதாகைகளில் மத, ஜாதி உணா்வைத் தூண்டு வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று, கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் மாவட்டத்தில் நடைபெறும் கோயில் திருவிழாக்கள், அரசியல் மற்றும் தனியாா் நிகழ்ச்சிகளில் வைக்கப்படும் பதாகைகளில் மத, மற்றும் ஜாதி உணா்வைத் தூண்டும் வகையிலான வாசகங்களைக் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

இதுதொடா்பான வாசகங்களை இடம்பெறச் சொல்லும் நபா்களிடம் அச்சக உரிமையாளா்கள் எடுத்துக் கூற வேண்டும். அவ்வாறு அச்சடிக்கக் கூறும் நபா்களின் பெயா், முகவரி, கைப்பேசி எண்களைப் பதிவு செய்து வைத்திருந்க வேண்டும்.

சா்ச்சைக்குரிய வாசகங்களை அச்சடிக்கக் கூறும் நபா்கள் குறித்து காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். இதை மீறினால் தொடா்புடைய நபா், அச்சக உரிமையாளா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் எஸ்.பி.