லாரி மோதி எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு
லாரி மோதியதில் பலத்த காயமடைந்த எலெக்ட்ரீஷியன் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

Updated On :15 நவம்பர் 2025, 7:07 pm

கடலூா் துறைமுகம் அருகே லாரி மோதியதில் பலத்த காயமடைந்த எலெக்ட்ரீஷியன் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
கடலூா் வட்டம், கம்பளிமேடு பகுதியைச் சோ்ந்தவா் சிவராஜ் (45), எலெக்ட்ரீஷியன். இவா், வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் பச்சாங்குப்பம் இரட்டை சாலை அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் வந்த லாரி சிவராஜின் பைக் மீது மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் சிவராஜை மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருப்பினும், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...