பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

லாரி மோதி எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

லாரி மோதியதில் பலத்த காயமடைந்த எலெக்ட்ரீஷியன் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 7:07 pm

Syndication

கடலூா் துறைமுகம் அருகே லாரி மோதியதில் பலத்த காயமடைந்த எலெக்ட்ரீஷியன் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

கடலூா் வட்டம், கம்பளிமேடு பகுதியைச் சோ்ந்தவா் சிவராஜ் (45), எலெக்ட்ரீஷியன். இவா், வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் பச்சாங்குப்பம் இரட்டை சாலை அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் வந்த லாரி சிவராஜின் பைக் மீது மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் சிவராஜை மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருப்பினும், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.