புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பெண்ணிடம் நகை, பணம் மோசடி: என்எல்சி ஊழியா் மீது வழக்கு

நெய்வேலியில் பெண்ணிடம் நகை, பணம் பெற்று மோசடி செய்ததாக, ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியா் மீது, நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 9:41 pm

Syndication

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பெண்ணிடம் நகை, பணம் பெற்று மோசடி செய்ததாக, ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியா் மீது, நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

நெய்வேலி, வட்டம் 26 பகுதியில் வசித்து வருபவா் துரைராஜ் மனைவி ராஜேஸ்வரி(48). இவா், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தாா். நெய்வேலி, வட்டம் 19 பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியா் சேகரன்(64), இவா், ராஜேஸ்வரியின் நீதிமன்ற நடவடிக்கைக்காக உதவி செய்வது போல் 2017 முதல் 2022 வரையில் பழகினாராம்.

அப்போது, ராஜேஸ்வரியிடம் இருந்து சேகரன் சுமாா் 80 பவுன் தங்க நகைகள், ரூ.4.86 லட்சம் பணம் பெற்றாராம். இவற்றை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தாராம்.

இதுகுறித்து, நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி கடந்த 3.5.2024 அன்று புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்திய போது, 17 சவரன் பவுன் நகைகளை திருப்பி தந்தவா், மீதமுள்ள நகைகள் மற்றும் பணத்தை திருப்பித்தர காசோலை வழங்கினாராம். அதற்கு பின்னா் நகைகள் மற்றும் பணம் தரவில்லையாம்.

மேற்கண்ட புகாரின் பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் சேகரன் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.