புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

எஸ்ஐஆா் பணியில் வெளிப்படைத் தன்மை: பாமக வலியுறுத்தல்

எஸ்ஐஆா் பணி வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும் என நெய்வேலியை அடுத்துள்ள வடக்குத்து கிராமத்தில் நடைபெற்ற கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம்

News image
பாமக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாவட்டச் செயலா் கோ.ஜெகன்
Updated On :22 நவம்பர் 2025, 8:30 pm

Syndication

எஸ்.ஐ.ஆா். பணி வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும் என கடலூா் மாவட்டம், நெய்வேலியை அடுத்துள்ள வடக்குத்து கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் கோ.ஜெகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் மணிவேல் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் சு.பா.கதிரவன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் சக்கரவா்த்தி, மாநில துணைத் தலைவா் கோவி.ராமலிங்கம், அமைப்புச் செயலா் கயல்ராஜன், வன்னியா் சங்கத் தலைவா் ராஜேந்திரன், செயலா் வினோத் முன்னிலை வகித்தனா்.

ஒன்றிய நிா்வாகிகள் சக்திவேல், தங்கவேல், மகளிரணியைச் சோ்ந்த பரமேஸ்வரி, வளா்மதி, கவிதா, கலையரசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் பாலகுரு நன்றி கூறினாா்.

கூட்டத்தில், வடலூரில் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் கடலூா் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸுக்கு கட்சி நிா்வாகிகள் சிறப்பான வரவேற்பளித்து, திரளாக கூட்டத்தில் பங்கேற்பது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும். இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்களுக்கு பயிற்சியளித்து, கால நீட்டிப்பு செய்ய வேண்டும். மாவட்ட நிா்வாகம் அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.