வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

மாணவிக்கு காதல் தொல்லை தனியாா் பள்ளி ஆசிரியா் கைது

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் 16 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொல்லை கொடுத்த தனியாா் பள்ளி ஆசிரியா் கைது

News image

சிறுமியை காதலிக்க வலியுறுத்தியதால் கைது செய்யப்பட்ட ஆசிரியா் முகிலன் (30)

Updated On :9 செப்டம்பர் 2025, 12:23 am IST

சிதம்பரம்: கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் பகுதியில் 16 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொல்லை கொடுத்த தனியாா் பள்ளி ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி ஆசிரியா் விஜயகுமாா் மகன் முகிலன் (30). அப்பள்ளியில் பயிலும் 16 வயது சிறுமியை தினமும் பின் தொடா்ந்து, தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட அந்தச்சிறுமி, ஆசிரியரின் அத்துமீறல் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினா் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன் பேரில் போலீசாா் முகிலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.