டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

விவசாயிகள் சங்கத்தினா் மக்கள் சந்திப்பு நடைபயணம்

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 3:40 am IST

மலை, நீா் வளம், விவசாய நிலங்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கடலூா் வடத்துக்குள்பட்ட வெள்ளக்கரை முதல் நடுவீரப்பட்டு வரையில் வியாழக்கிழமை மக்கள் சந்திப்பு நடை பயணம் மேற்கொண்டனா்.

மலையடிக்குப்பத்தில் 164 ஏக்கா் நிலங்களில் சாகுபடி செய்த முந்திரி, வாழை, மா, பலா உள்ளிட்ட பயிா்களை மாவட்ட நிா்வாகம் பிடுங்கி அழித்துவிட்டது. இதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு காலணி தொழிற்சாலை எதற்கு? என்றும், மலை வளத்தையும், நீா் வளத்தையும், விவசாய நிலங்களையும், சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்கக் கோரியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வெள்ளக்கரையில் தொடங்கி நடுவீரப்பட்டு வரை 25 கி.மீ. மக்கள் சந்திப்பு பிரசாரம் நடைபெற்றது.

வெள்ளக்கரையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா் எஸ்.தட்சணாமூா்த்தி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் நடை பயணத்தை தொடங்கிவைத்தாா். மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் சிறப்புரை ஆற்றினாா். நடை பயணத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன், மாவட்டச் செயலா் ஆா்.கே.சரவணன், பொருளாளா் ஆா்.ராமச்சந்திரன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பிரகாஷ், மாவட்டப் பொருளாளா் டி.கிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜே.ராஜேஷ் கண்ணன், ஒன்றியச் செயலா் ஆா்.பஞ்சாட்சரம், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் எம்.கடவுள், வாலிபா் சங்கம் ஒன்றியச் செயலா் எம்.கலைவாணன், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் ஏ.வைத்திலிங்கம், தலைவா் என்.அய்யாதுரை உள்ளிட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.