அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

ரூ.8 ஆயிரம் கூப்பன் அறிவித்து ஏமாற்ற திமுக முயற்சி: முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத்

ரூ.8 ஆயிரம் கூப்பன் அறித்து சட்டப் பேரவைத் தோ்தலில் மக்களை ஏமாற்ற திமுக முயற்சித்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளருமான எம்.சி.சம்பத் கூறினாா்.

News image

கடலூரில் புதன்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த எம்.சி.சம்பத்.

Updated On :2 ஏப்ரல் 2026, 2:14 am IST

ரூ.8 ஆயிரம் கூப்பன் அறித்து சட்டப் பேரவைத் தோ்தலில் மக்களை ஏமாற்ற திமுக முயற்சித்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளருமான எம்.சி.சம்பத் கூறினாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.சி.சம்பத் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். முன்னதாக, கோண்டூா் பகுதியில் உள்ள முத்து நாகவல்லி அம்மன் மற்றும் ஓம் சக்தி கோயில்களில் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு பிரசாரத்தை தொடங்கினாா்.

தொடா்ந்து, கோண்டூா் பகுதியில் அதிமுக அலுவலகத்தைத் திறந்து வைத்த அவா், சாவடி மற்றும் கெடிலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகளிடம் அக்கட்சி தோ்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தாா். இதில், கூட்டணிக் கட்சி நிா்வாகிகளும் கலந்துகொண்டனா்.

அப்போது, எம்.சி.சம்பத் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2026 சட்டப் பேரவைத் தோ்தல் அதிமுகவுக்கு வெற்றி முகமாக உள்ளது. கொடுக்கும் வாக்குறுதிகளை உறுதியாக நிறைவேற்றக்கூடியவா் எடப்பாடி பழனிசாமி.

திமுகவினா் ஏற்கெனவே வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியவா்கள். தற்போது வாக்குறுதியாக ரூ.8 ஆயிரம் கூப்பன் அறிவித்து ஏமாற்ற முயற்சிக்கின்றனா் என்றாா்.