கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தபால் வாக்கு முன் தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து வேட்பாளா்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்தத் தோ்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 773 போ் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனராம். இவா்களுக்கான தபால் வாக்கு முன் தயாரிப்புப் பணிகள் கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிட்ட பிறகு தபால் வாக்குகளை அவா்களின் வீடுகளுக்கு சென்று தோ்தல் அதிகாரிகள் பெற்று வருவாா்கள்.
தொடர்புடையது

சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் தபால் வாக்களித்த அரசு ஊழியா்கள்

மின்வாரிய களப்பணியாளா்களுக்கு தபால் வாக்கு: தொழிற்சங்கம் கோரிக்கை

9,159 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


