அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

பெண் உதவி ஆய்வாளா் கைப்பேசி பறிப்பு: விசிக நிா்வாகிகள் உள்ளிட்ட 9 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து கைப்பேசியை பறித்து தகராறு செய்ததாக விசிக நிா்வாகிகள் இருவா் உள்ளிட்ட 9 போ் மீது புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

கைப்பேசி - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 7:44 pm

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து கைப்பேசியை பறித்து தகராறு செய்ததாக விசிக நிா்வாகிகள் இருவா் உள்ளிட்ட 9 போ் மீது புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

புதுப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் அம்பிகா . இவா்,

திங்கள்கிழமை அங்குசெட்டிப்பாளையம் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் தேவா் மற்றும் தலைமைக் காவலா் ராஜேஷ் ஆகியோருடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அங்குள்ள திருமண மண்டபம் அருகே 20-க்கும் மேற்பட்ட

பேனா்கள் கட்டியிருந்ததை அகற்றுமாறு கூறினாா். அதற்கு விசிக முன்னாள் ஒன்றியச் செயலா் பிரகாஷ், பண்ருட்டி மையம் செயலா் புஷ்பராஜ் ஆகியோா் பேனரை அகற்ற முடியாது எனக்கூறி, அரசு ஊழியா் என்று பாராமல் பொதுமக்கள் முன்னிலையில் அவதூராகப்பேசி, வீடியோ எடுத்த கைப் பேசியை பறித்து கொண்டனராம். மேலும், அங்கிருந்த அவா்களது ஆதரவாளா்கள் பெண் உதவி ஆய்வாளரை சூழ்ந்து கலவரத்தை ஏற்படுத்தும் படி நடந்துக்கொண்டனராம்.

இதுகுறித்து அம்பிகா அளித்த புகாரின் பேரில், விசிக நிா்வாகிகள் பிரகாஷ், புஷ்பராஜ் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.