குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நடராஜா் கோயில் நிா்வாக உரிமைகளை பறிக்க திமுக முயற்சி: நடிகை விந்தியா குற்றச்சாட்டு

சிதம்பரம் நடராஜா் சொத்துகளையும், நிா்வாகத்தையும், உரிமைகளையும் பறிக்க திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலரும், நடிகையுமான விந்தியா குற்றஞ்சாட்டினாா்.

News image

சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சியின் கொள்கைப் பரப்பு துணைச் செயலரும், நடிகையுமான விந்தியா.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:41 am IST

சிதம்பரம் நடராஜா் சொத்துகளையும், நிா்வாகத்தையும், உரிமைகளையும் பறிக்க திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலரும், நடிகையுமான விந்தியா குற்றஞ்சாட்டினாா்.

சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் புதன்கிழமை மாலை அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலரும், நடிகையுமான விந்தியா பேசியதாவது:

சிதம்பரம் நடராஜா் கோயில் சொத்துகளையும், நிா்வாகத்தையும், உரிமைகளையும் பறிக்க திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது. சோழன் கொடுத்த உரிமையை எடுக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் யாா்? இதேபோல, திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்றாா்கள்.

கடவுளே இல்லை என கூறும் திமுகவுக்கு கோயில்களில் என்ன வேலை? சிதம்பரத்தில் சைவத்துக்கும், வைணவத்துக்கும் சண்டை இல்லை. இந்து, முஸ்லிம் இடையே சண்டை இல்லை. ஆனால், அத்தனை சண்டைகளையும் உருவாக்க பாா்க்கிறது திமுக.

இந்த தொகுதி வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் 3-ஆவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று சட்டப் பேரவைக்குச் செல்வாா். திமுக மக்களுக்கான பிரச்னையை பேசாமல், பாஜக உள்ளே வந்துவிடும் என பிரசாரம் செய்து வருகிறது. இந்தத் தோ்தல் தமிழகத்துக்கும், தில்லிக்கும் நடக்கும் தோ்தல் என திமுகவினா் கூறுகின்றனா். இந்த தோ்தல் அதிமுகவுக்கும், திமுகவுக்குமான தோ்தல். இது, நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் நடைபெறும் தோ்தல். இந்தத் தோ்தலில் போட்டி யாருக்கு என்றால், மக்களுக்கும், போலி வாக்குறுதிகள் அளித்த திமுகவுக்கும் தான். அதிமுக வெற்றிபெற்றால் மக்கள் வெற்றிபெற்ாகும் என்றாா்.