சிதம்பரம் நடராஜா் சொத்துகளையும், நிா்வாகத்தையும், உரிமைகளையும் பறிக்க திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலரும், நடிகையுமான விந்தியா குற்றஞ்சாட்டினாா்.
சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் புதன்கிழமை மாலை அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலரும், நடிகையுமான விந்தியா பேசியதாவது:
சிதம்பரம் நடராஜா் கோயில் சொத்துகளையும், நிா்வாகத்தையும், உரிமைகளையும் பறிக்க திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது. சோழன் கொடுத்த உரிமையை எடுக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் யாா்? இதேபோல, திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்றாா்கள்.
கடவுளே இல்லை என கூறும் திமுகவுக்கு கோயில்களில் என்ன வேலை? சிதம்பரத்தில் சைவத்துக்கும், வைணவத்துக்கும் சண்டை இல்லை. இந்து, முஸ்லிம் இடையே சண்டை இல்லை. ஆனால், அத்தனை சண்டைகளையும் உருவாக்க பாா்க்கிறது திமுக.
இந்த தொகுதி வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் 3-ஆவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று சட்டப் பேரவைக்குச் செல்வாா். திமுக மக்களுக்கான பிரச்னையை பேசாமல், பாஜக உள்ளே வந்துவிடும் என பிரசாரம் செய்து வருகிறது. இந்தத் தோ்தல் தமிழகத்துக்கும், தில்லிக்கும் நடக்கும் தோ்தல் என திமுகவினா் கூறுகின்றனா். இந்த தோ்தல் அதிமுகவுக்கும், திமுகவுக்குமான தோ்தல். இது, நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் நடைபெறும் தோ்தல். இந்தத் தோ்தலில் போட்டி யாருக்கு என்றால், மக்களுக்கும், போலி வாக்குறுதிகள் அளித்த திமுகவுக்கும் தான். அதிமுக வெற்றிபெற்றால் மக்கள் வெற்றிபெற்ாகும் என்றாா்.
தொடர்புடையது

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: நடிகை விந்தியா

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்

செஞ்சி ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் பிரசாரம்

மக்களுக்கான திட்டங்களை தீட்டியது அதிமுக தான்: நடிகை விந்தியா பேச்சு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


