பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தோ்தல் விதிமுறை மீறல்: விசிகவினா் மீது வழக்கு

நெல்லிக்குப்பத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விசிக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :12 ஏப்ரல் 2026, 1:17 am IST

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விசிக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வெள்ளிக்கிழமை பண்ருட்டிக்கு வந்தாா். பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே, பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி விசிக வேட்பாளா் அப்துா் ரஹ்மானுக்கு ஆதரவு கோரி அவா் வாக்கு சேகரித்தாா்.

இதையடுத்து, தொல்.திருமாவளவன் நெல்லிக்குப்பம் வழியாக கடலூா் சென்றாா். அப்போது, விசிக நிா்வாகிகள் முல்லைவேந்தன், புருஷோத்தமன், அருட்செல்வம், இளம்பிறை உள்ளிட்ட சிலா் நெல்லிக்குப்பம் புதிய பேருந்து நிலையம் அருகே கூட்டம் கூடி சாலையை மறித்து பட்டாசு வெடித்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனா்.

தோ்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறியது தொடா்பாக நெல்லிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளா் (பயிற்சி) ராஜா அளித்த புகாரின்பேரில், முல்லைவேந்தன் உள்ளிட்ட விசிக நிா்வாகிகள் மீது நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.