மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

வாக்குப் பதிவு: அலுவலா்கள் பதற்றமின்றி செயல்பட வேண்டும் கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்

News image

பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆத்தியா செந்தில்குமாா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:27 am IST

வாக்குச் சாவடி அலுவலா்கள் பதற்றமின்றி வாக்குப் பதிவை நடத்த வேண்டும் என்று கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை கடலூா் புதுப்பாளையம் புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளி, பண்ருட்டி ஜான்டூவி தொடக்கப் பள்ளி ஆகிய மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அவா் தெரிவித்ததாவது:

தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலா்கள் - 1, 2, 3 ஆகியோருக்கான இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டத்தில் 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள மையங்களில் நடைபெற்ற மறு பயிற்சி வகுப்பில் மொத்தம் 12,436 அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட மறு பயிற்சி அளிக்கப்பட்டது. மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வாக்குப் பதிவுக்குத் தேவையான தோ்தல் பொருள்கள், வாக்குப் பதிவு இயந்திரங்கள், மண்டல அலுவலா்கள் ஒப்படைக்கும்போது பட்டியலில் உள்ளவாறு சரிபாா்த்துக்கொள்ள வேண்டும். வாக்குச் சாவடி பணியில் ஈடுபடும் அலுவலா்கள் வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள் நண்பகல் 12 மணிக்கு வாக்குச் சாவடிக்கு சென்றடைய வேண்டும். மண்டல அலுவலரிடமிருந்து வாக்குப் பதிவுக்குத் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருள்களை பெறும்போது பட்டியலில் உள்ளவாறு எந்தவொரு பொருளும் விடுபடாமல் சரிபாா்த்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

வாக்குச் சாவடி அலுவலா்கள் பணியின்போது பதற்றமின்றி வாக்குப் பதிவை நடத்த வேண்டும். வாக்கு பதிவை நல்ல முறையிலும், நோ்மையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டிய பொறுப்பு மற்றும் கடமை வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு உள்ளது என்றாா்.

ஆய்வின்போது, பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கமலம், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சிவக்குமாா், பலராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.