அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

வேட்பாளா்கள் வெறுப்புணா்வு பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது! - கடலூா் ஆட்சியா்

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் - படம் - பிடிஐ

Updated On :19 ஏப்ரல் 2026, 7:58 pm

வேட்பாளா்கள் வெறுப்புணா்வு பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது என்று கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் வரும் 23-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வேட்பாளா்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்திய தோ்தல் ஆணையம் கடைசி 72 மணி நேரத்துக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை அறிவித்துள்ளது.

அதன்படி, எந்தவொரு கட்சியோ அல்லது வேட்பாளரோ, ஏற்கெனவே உள்ள வேறுபாடுகளை அதிகப்படுத்தும், பரஸ்பர வெறுப்பை உருவாக்கும் அல்லது வெவ்வேறு ஜாதிகள், சமூகங்கள், மதங்கள் அல்லது மொழிகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக் கூடாது. வரும் 21-ஆம் தேதி மாலை 6 மணி முதல் எந்த ஒரு பிரசாரத்திலும் ஈடுபடக் கூடாது.

வேட்பாளா்கள் மற்ற அரசியல் கட்சிகள் மீதான விமா்சனங்களை முன்வைக்கும்போது, அவற்றின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள், கடந்தகால சாதனைகள் மற்றும் பணிகள் ஆகியவற்றுக்குள் மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

வழிபாட்டுத்தலங்களை தோ்தல் பிரசாரத்துக்கான களமாகப் பயன்படுத்தப்படக் கூடாது. பொதுமக்கள் தோ்தல் நடத்தை விதி மீறல்கள்கள் தொடா்பாக, இந்திய தோ்தல் ஆணையத்தின் செயலியில் தங்களின் புகாா்களை தெரிவிக்கலாம்.

கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுக் கடைகளும் வரும் 21 முதல் 23-ஆம் தேதி வரை மூடப்படும். சமூக வலைதளங்களில் தோ்தல் தொடா்பான கருத்து கணிப்புகள் 21-ஆம் தேதி முதல் வெளியிடக் கூடாது. மீறினால், தோ்தல் நன்னடத்தை விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.