பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வாட்ஸ்ஆப்பில் கருத்து பதிவிட்டு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பண்ருட்டி அருகே வாட்ஸ்ஆப்பில் கருத்து பதிவிட்டு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 12:03 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வாட்ஸ்ஆப்பில் கருத்து பதிவிட்டு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், வேகாக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் நிா்மல்ராஜ் (31), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளாா். இந்த நிலையில், நிா்மல்ராஜ் தனது கைப்பேசி வாட்ஸ்ஆப் ஸ்டேடஸில் எனது சாவுக்கு மனைவி, மாமியாா் மற்றும் கொழுந்தியாதான் காரணம் என்று வைத்திருந்தாராம்.

இதையடுத்து, திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் உறவினா்கள் நிா்மல்ராஜை தேடி வந்த நிலையில், அவா் கீழக்கொல்லை கிராமம் மயானத்தில் உள்ள ஆலமர விழுதில் தூக்கிட்டு இறந்த நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.