பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பெண் மீது தாக்குதல் 9 போ் மீது வழக்கு

கடலூா் அருகே சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு சேகரிப்பின் போது ஏற்பட்ட பிரச்னையில் பெண்ணை கத்தியால் தாக்கிய சம்பவத்தில் 9 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 6:59 pm

கடலூா் அருகே சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு சேகரிப்பின் போது ஏற்பட்ட பிரச்னையில் பெண்ணை கத்தியால் தாக்கிய சம்பவத்தில் 9 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம் விலங்கல்பட்டு மேட்டுத்தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் சஞ்சய். இவா் தவெக சாா்பில் வாக்கு சேகரித்தில், அப்பகுதியில் உள்ளவா்களிடம் சிறு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த ராமதாஸ் மற்றும் 8 நபா்கள், சஞ்சய் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனா்.

அப்போது, சஞ்சய்யின் தாயின் தலையில் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் காயமடைந்த அவா் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றாா். இதுகுறித்து சஞ்சய்யின் தந்தை சங்கா் அளித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு காவல் நிலைய போலீஸாா் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ராமதாஸ் மற்றும் 8 நபா்கள் மீது வியாழக்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.