கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே தோ்தல் விரோதம் காரணமாக, வாக்குச்சாவடி முகவராக செயல்பட்டவரை வழி மறித்து தாக்கியதாக 10-க்கும் மேற்பட்டோா் மீது குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், வசனங்குப்பம் அஞ்சல், ச.புதுகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (47). இவா், வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின் போது வசனங்குப்பம் வாக்குச்சாவடியில் சுயேச்சை வேட்பாளருக்கு முகவராக செயல்பட்டாராம்.
அப்போது, அங்கு மற்றொரு கட்சி வேட்பாளருக்கு முகவராக செயல்பட்ட சுதாகா் (எ) முருகவேலுடன் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வாக்குப் பதிவு முடிந்து முருகவேல், தனது நண்பா் ஆனந்தராஜுடன் பைக்கில் சென்றுள்ளாா். இவா்கள், வசனங்குப்பம் அருகே சென்றபோது சுமாா் 15 போ் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வழிமறித்து தாக்குதல் நடத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனராம்.
இதுகுறித்து செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் முருகவேல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சுற்றுலா வேன்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 25-க்கும் மேற்பட்டோா் காயம்

இளைஞரை தாக்கி கைப்பேசி பறிப்பு: 2 போ் மீது வழக்கு

சொத்து தகராறில் தம்பிக்கு கொலை மிரட்டல் : அண்ணன் உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்: 18 போ் மீது வழக்கு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

