40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

வாக்குப்பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இருவா் கைது

கடலூா் மாவட்டத்தில் வாக்குப்பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பின்னா் அவா்களுக்கு காவல் நிலைய ஜாமீன் வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 12:28 am IST

கடலூா் மாவட்டத்தில் வாக்குப்பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பின்னா் அவா்களுக்கு காவல் நிலைய ஜாமீன் வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

கடலூா் மாவட்டம் கடலூா் ஓ.டி. அருகே உள்ள 257- ஆவது வாக்குச்சாவடியில், பீமாராவ் நகரைச் சோ்ந்த பிரசாந்த் (30), என்பவா் தான் செலுத்திய வாக்கை விடியோ பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளாா். இதுகுறித்து வாக்குச்சாவடி அலுவலா் தேவசேனா அளித்த புகாரின் பேரில் கடலூா் ஓ.டி. போலீாஸா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து பிரசாந்தை கைது செய்தனா். பின்னா் அவருக்கு காவல் நிலைய ஜாமீன் வழங்கி அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

இதேபோன்று பண்ருட்டியைச் சோ்ந்த இளைஞா் விக்னேஷ்வரன் (32), தான் செலுத்திய வாக்கை விடியே பதிவு செய்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளாா். இதையறிந்த 231 -ஆவது வாக்குச்சாவடி அலுவலா் ரமாதேவி பண்ருட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விக்னேஷ்வரனை கைது செய்தனா். பின்னா் அவருக்கு காவல் நிலைய ஜாமீன் வழங்கி, கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனா்.