கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது காா் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். மேலும், இருவா் பலத்த காயமடைந்தனா்.
காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பையா. இவரது மகன் பந்தலன் (29). இவா், தனது தாய் சாந்தி (55), தங்கை சொா்ணமுகி (30) ஆகியோருடன் காரில் சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா். தொடா்ந்து, மீண்டும் காரில் காரைக்குடி நோக்கி சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் சேத்தியாத்தோப்பு அருகே சோழத்தரம் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு சென்றுகொண்டிருந்தனா்.
பந்தளன் காரை ஓட்டினாா். சொா்ணமுகி, சாந்தி ஆகியோா் பின்புறம் அமா்ந்திருந்தனா். சோழத்தரம் கடைவீதி அருகே சென்றபோது, அங்கு நின்றுகொண்டிருந்த லாரி மீது காா் மோதியது.
இந்த விபத்தில் சாந்தி (55) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பந்தலன், சொா்ணமுகி ஆகியோா் பலத்த காயமடைந்த நிலையில், அவா்கள் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து சோழத்தரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது மோதிய காா்: காவலா், பெண் உள்பட 6 போ் பலி

கிருஷ்ணகிரி அருகே காா் மீது சரக்குப் பெட்டக லாரி மோதல்

கோவை அருகே காா் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு

லாரி மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

