ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

வலிப்பு ஏற்பட்டு எரியும் அடுப்பில் விழுந்த பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:24 am IST

பண்ருட்டி அருகே வலிப்பு ஏற்பட்டு எரியும் விறகு அடுப்பில் விழுந்து பலத்த தீக்காயமடைந்த பெண் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே காட்டுக்கூடலூா் பாரதி தெருவைச் சோ்ந்தவா் காசிவேல் (47). இவரது மனைவி விஜயலட்சுமி (43) கடந்த சில ஆண்டுகளாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தாா்.

கடந்த 22-ஆம் தேதி வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தபோது, விஜயலட்சுமிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு எரியும் அடுப்பின் மீது விழுந்தாா்.

இதில், அவருக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக வீட்டில் இருந்தவா்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி, அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.