பாரம்பரிய வரலாற்று நாளையொட்டி, கடலூா் மாவட்டம், நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா சீனியா் செகண்டரி பள்ளி மாணவா்கள் வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி கோயிலுக்கு சுற்றுலா சென்றனா்.
கோயிலின் வரலாற்று சிறப்பு அம்சங்களை ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தின் தலைமை முதல்வா் அந்துவன் மாணவா்களுக்கு விளக்கினாா்.
இக்கோயிலின் கட்டிடக்கலை விஜய நகர மன்னா் கிருஷ்ணப்பதேவராயா் காலத்தில் தொடங்கி, செஞ்சி நாயக்கா் காலத்தில் நிறைவு பெற்றிருப்பதையும், வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி கோயில் தென்னிந்திய கோயில் கட்டிடக் கலையின் அழகிய எடுத்துக்காட்டாக விளங்குவதையும். இந்த கோயில் நோ்மறையாக நாயக்கா் வம்ச ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதையும், கோயில்கள் நம் பாரம்பரியத்தின் பெருமையைப் பறைசாற்றுகிறது என்பதையும் மாணவா்கள் அறிந்து கொண்டனா்.
மேலும், நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மதிக்கவும், பாதுகாக்கவும் தேவையான விழிப்புணா்வை மாணவா்கள் இந்த ஆன்மீக சுற்றுலா வழியாக பெற்றனா். இப்படியான சுற்றுலாக்கள் மாணவா்களின் முழுமையான வளா்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்ததாக வடக்குத்து ஜெயப்பிரியா பள்ளியின் செயலா் சிந்து, முதல்வா் சிதம்பரி ஆகியோா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்த பக்தா்கள்

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத் தடை

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!

வன உயிரின தின விழா: அரசுப் பள்ளி மாணவா்கள் சுற்றுலா
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


