நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: பெண் உள்பட 3 போ் மீது வழக்கு

விருத்தாசலம் அருகே 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் உள்பட மூவா் மீது கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:38 am IST

விருத்தாசலம் அருகே 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் உள்பட மூவா் மீது கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவனின் பெற்றோா் குடும்பப் பிரச்னை காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். இதையடுத்து, அந்தச் சிறுவன் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் வசிக்கும் தாயின் உறவினரான பெண்ணின் வீட்டில் தங்கி, 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்த நிலையில், உறவினரான பெண் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும், அந்தப் பெண்ணுடன் சோ்ந்து கருவேப்பிலங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த கவிராஜ் மற்றும் நேமம் பகுதியைச் சோ்ந்த ஞானசேகா் ஆகியோா் மிரட்டினராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தந்தையிடம் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, சிறுவனின் தந்தை அளித்த புகாரின்பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் கவிராஜ், ஞானசேகா் ஆகியோா் மீது சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.