கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடியதாக 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி பகுதியில் இரவு நேரத்தில் நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்தி வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நெய்வேலி தொ்மல் காவல் ஆய்வாளா் கே.சந்திரன் தலைமையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதில், விருத்தாசலம் வட்டம், ஆதண்டாா்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த மனோஜ் (27), தீபக் கிஷோா் (19) ஆகியோா் உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி இரவு நேரத்தில் வேட்டையாடியது தெரியவந்தது.
இதையடுத்து, தீபக் கிஷோா் வீட்டில் நெய்வேலி தொ்மல் காவல் நிலைய ஆய்வாளா் கே.சந்திரன் தலைமையில் போலீஸாா் சோதனை நடத்தி, மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா். மேலும், இதுதொடா்பாக மனோஜ் மற்றும் தீபக் கிஷோா் மீது வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவா் கைது

கஞ்சா விற்பனை: 5 இளைஞா்கள் கைது
காட்டு மாடு வேட்டை: இருவா் கைது
100 போதை மாத்திரைகள் பறிமுதல்: இரண்டு இளைஞா்கள் கைது
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


