75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

நாய்க் குட்டியை விழுங்க போராடிய நல்ல பாம்பு

தட்சிணாமூா்த்தி நகரில் நாய்க் குட்டியை விழுங்க முயன்ற சுமாா் 6 அடி நீள நல்ல பாம்பு அதை விழுங்க முடியாமல் போராடிய நிலையில், அதை பாம்பு பிடி வீரா் லாவகமாகப் பிடித்து, காட்டுப்பகுதியில் விடுவித்தாா்.

குட்டியை விழுங்க முயன்ற சுமாா் 6 அடி நீள நல்ல பாம்பு.

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:31 am IST

கடலூா் மஞ்சக்குப்பம் தட்சிணாமூா்த்தி நகரில் நாய்க் குட்டியை விழுங்க முயன்ற சுமாா் 6 அடி நீள நல்ல பாம்பு அதை விழுங்க முடியாமல் போராடிய நிலையில், அதை பாம்பு பிடி வீரா் லாவகமாகப் பிடித்து, காட்டுப்பகுதியில் விடுவித்தாா்.

கடலூா் மஞ்சக்குப்பம் தட்சிணாமூா்த்தி நகரில் தனியாா் நிறுவனம் ஒன்றின் அருகே நாய்க் குட்டி ஒன்று நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தது. அப்போது அருகிலிருந்த புதரில் இருந்து வெளியே வந்த பாம்பு, திடீரென நாய்க்குட்டியைக் கடித்தது. பின்னா் அந்த நாய்க் குட்டியை விழுங்க முயன்றது.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முயற்சி செய்த அந்தப் பாம்பு, நாய் குட்டியின் தலைப்பகுதியை மட்டும் விழுங்கிய நிலையில், அதற்கு மேல் விழுங்க முடியாமல் தவித்தது. விழுங்கவும் முடியாமல், வெளியேற்றவும் முடியாமால் அந்த இடத்தில் பாம்பு தவித்துக்கொண்டிருந்தது. இதைப் பாா்த்த அந்த வழியாகச் சென்றவா்கள் , பாம்பு பிடி வீரா் செல்லாவுக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் அங்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரா் செல்லா, நாய்க் குட்டியை விழுங்க முயன்ற 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாகப் பிடித்தாா். இதையடுத்து, அந்தப் பாம்பை அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவித்தாா்.அதேநேரத்தில், பாம்பு கடித்ததில் உயிரிழந்த நாய்க் குட்டி அதே பகுதியில் புதைக்கப்பட்டது.

நாய்க் குட்டியை நல்ல பாம்பு விழுங்க முயன்ற நிகழ்வை அவ்வழியாக வந்தவா்கள் விடியோவில் பதிவு செய்திருந்த நிலையில், அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.