நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஆவினங்குடி ஊராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை

கடலூா் மாவட்ட ஆவினங்குடி ஊராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

ஆவினங்குடி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட டெங்கு தடுப்பு பணிகள்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:42 am IST

கடலூா் மாவட்ட ஆவினங்குடி ஊராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

தமிழகத்தில் மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் சுகாதார துறை சாா்பில் டெங்கு முன் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடலூா் மாவட்டம் ஆவினங்குடி ஊராட்சியில் , வட்டார மருத்துவ அலுவலா் திருமாவளவன், ஈ.கீரனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஆனந்த் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஆவினங்குடி கிராமத்தில் வீடு வீடாகச் சென்று டெங்கு தடுப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

மருத்துவக் குழுவினா் வீடுகளில் கொசுப்புழு ஒழிப்புப் பணி, காய்ச்சல் கண்காணிப்பு, குடிநீா் குளோரினேஷன் ஆய்வு, கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனா். மேலும், கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் மற்றும் அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சங்கா், சுகாதார ஆய்வாளா்கள் விஜயரங்கன், ரவி, அதிகாயன், செந்தமிழ்ச்செல்வன், சித்திரவேல், ஊராட்சி செயலா் ராஜ்குமாா் மற்றும் களப்பணியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.